ஊடகவியலாளர்கள் வைத்தியசாலையில்?


முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற முல்லைத்தீவு ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன் மற்றும் கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே மரக்கடத்தல்கார்கள் தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் , நீதி கோரியும் பொலிஸ்மா அதிபருக்கு முறையிடப்பட்டுள்ள நிலையில் முல்லைதீவு காவல்துறை அத்தியட்சகருக்கு உரிய நடவடிக்கைக்கு பணிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




No comments