யாழில் இரு கிராமசேவையாளர் பிரிவு முடக்கம்?


யாழ்ப்பாண மாநகரசபை  எல்லைக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65 , 67 முடக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் நேற்று இரவு விடுத்த கோரிக்கைக்கு அமைய முடக்க நிலை கொண்டுவரப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நேற்றைய தினம் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஐவர் இனம் கானப்பட்டனர்.இனம் காணப்பட்ட ஐவரில் மூவர் தனிமைப்படுத்தல் மையத்தில் இருந்தபோதும் இருவர் போலியகொட மீன் சந்தைக்குச் சென்று கடந்த வெள்ளிக்கிழமையே யாழ்ப்பாணம் திரும்பியிருந்தனர்.

அவ்வாறு வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. நேற்றைய தினம் யாழ்ப்பாணம் பிராந்திய பொது சுகாதார வைத்திய அதிகாரியினால் குறித்த இரு குருநகரைச் சேர்ந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட சமயம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையிலேயே குருநகரின் இரு கிராம சேவகர் பிரிவுகளையும் உடன் தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாகவே காலை முதல் முடக்க நிலை அமுலுக்கு வந்துள்ளது.


No comments