ஆணைக்குழு விசாரணையில் ரணில் மற்றும் ஹக்கீம்

அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான்கரை மணிநேரத்திற்கும் அதிக காலம் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளது.

இன்று முற்பகல் 9.50 அளவில், அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார். நான்கரை மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட நிலையில் வெளியேறியுள்ளார்.

இதேபோன்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தார்.

சுமார் 06 மணித்தியாலங்கள் வாக்கமூலம் வழங்கிய பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியுள்ளார்.

No comments