சுண்டுக்குழியில் உந்துருளிகள் எரிப்பு!

யாழ். சுண்டுக்குளி பகுதியில் வீட்டில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்ட உந்துருளிகள்  இனந்தெரியாதோரால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

வீட்டில் அதிகாலை அனைவரும் உறக்கத்தில் இருந்த வேளையில்  இனந்தெரியாத குழுவொன்றினால் குறித்த சம்பவம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இரண்டு உந்துருகளுக்கு தீ வைத்தபோதிலும் ஒருஉந்துருளி முற்றாக எரிந்து நாசமாகிய நிலையில் மற்றைய மோட்டார் சைக்கிள் சிறியளவில் எரிந்துள்ளது.

உந்துருளிகளுக்கு தீ வைத்ததன் காரணமாக வீடு முழுவதும் தீ பரவி வீட்டிருந்த தளபாடங்களும் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.



No comments