அரசியல் கைதிகள் விடுவிப்பு?

சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளில் சிறு குற்றங்கள் மற்றும் புனர்வாழ்வு பெற விரும்புவோர் தொடர்பில் தகவல்கள் அரசால் திரட்டப்பட்டு வருகின்றது.

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை .லங்கை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைசாலைகள் ஆணையாளர் nதிவித்துள்ளார்.

29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படாத நிலையில் தற்போது அவர்கள் பற்றி தகவல் திரட்டப்பட்டுவருவது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


No comments