யாழில் ஊடகப்பணியாளர் மீது தாக்குதல்?

 


யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன.

இந்தச் சம்பவம் இன்று (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் (வயது-43) என்பவரே வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments