கொரோன சீனாவில் தயாரித்த வைரஸ்! ஆய்வுகூட பணியாளர் ட்விட்டர் கணக்கு முடக்கம்!


சீனாவில் உள்ள மருத்துவ ஆய்வுகூடம்  ஒன்றில் தான் கொரோனா வைரஸ் உற்பத்தியானது என்று அந்த ஆய்வுக்கூட ஆய்வாளர் மருத்துவர் லி மெங் யான் என்பவர் சமீபத்தில் தனது டுவிட்டரில் கூறியிருந்தார். இந்த உண்மையை லி மெங் யான் தனது ட்விட்டர் கணக்கில் கூறியதை அடுத்து டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் தற்போது லி மெங் யான் அவர்களது டுவிட்டர் பக்கம் திடீரென தடை  செய்யப்பட்டுள்ளது. டுவிட்டர் விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

முக்கிய நிகழ்வுகள் மற்றும் சம்பவங்கள் திசை திருப்பும் வகையில் செய்திகளை பரப்பினால் அவரது டுவிட்டர் கணக்குகள் சஸ்பெண்ட் செய்யப்படும் என்பது டுவிட்டர் விதிகளில் ஒன்றாகும். இந்த விதியின் படிதான் லி மெங் யான் டுவிட்டர் பக்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதுஎன்றுமேலும் குறிப்பிடப்படுகிறது, எனினும் இந்த தடையின் பின்னணியில் சீன அரசாங்கமே இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

No comments