முன்னணியில் நீடிப்பேன்: வி.மணிவண்ணன்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையின் கீழ் தமிழ் மக்கள் நலன்சார்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கீழ் தொடர்ந்து

பயணிக்கவுள்ளதாக வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட  பின்னராக முதன் முதலாக ஊடகங்கள் முன்னராக யாழ்.ஊடக அமையத்தில் வி.மணிவண்ணன் கருத்து வெளியிட்டார்.

நான் தவறிழைத்திருந்தால் கட்சி தலைமை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கொள்ளவோ விளக்கமளிக்கவோ தயாராக இருப்பதாக தெரிவித்த வி.மணிவண்ணன் தேர்தல் காலத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் கட்சி தலைவரிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் எதிர்பார்த்திருப்பதாகவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பில் நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்ததுடன் அவருடன் இணைந்து நீண்ட தூரம் பயணிக்க விரும்புவதாகவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.


No comments