பொலநறுவையிலிருந்து யாழுக்கு கொரோனா?


யாழ்ப்பாணத்திற்கு தொழில் நிமித்தம் வந்திருந்த பொலன்னறுவை சேர்ந்த ஒருவர் கொரோனா அறிகுறியுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எழுவைதீவில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமையே பொலன்னறுவையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

கொரோனா அறிகுறிகளுடன் எழுவைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், தற்போது அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இன்று இரவு பரிசோதனை முடிவு வெளியாகும். பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை அவருடன் தொடர்புடையவர்கள் எழுவை தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments