கரை ஒதுங்கியது மீனவர் சடலம்?


யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்று கடலில் தவறிவீழ்ந்த மீனவரின் சடலம் காங்கேசன்துறை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற 72 வயதுடைய மீனவர் கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் சக மீனவர்கள், கடற்படையினர் இரண்டு நாட்களாக கடலில் தொடர்ந்து தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து,  இன்று காலை காங்கேசன்துறை கடற்கரையில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments