வாக்கு சீட்டு அச்சிடப்படவில்லையென்பது பொய்



வாக்குச் சீட்டு அச்சிடுதல் இடைநிறுத்தப்பட்ட செய்தி தவறானது - அரசாங்க அச்சகம்.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவைக்குமாறு அறிவித்ததாக மவ்பிம (07) பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தவறானது என்று அரசாங்க அச்சகத்தினை சேர்ந்த கங்கனி கல்பனி லியனகே அவர்கள் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து தன்னுடன் யாரும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை என்றும், ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை என்றும், அத்தகைய தகவல்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments