போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டார் கொசோவா அதிபர்



கொசோவோ அதிபர் ஹாஷிம் தாசி மீது ஹேக்கில் அமைந்துள்ள சிறப்பு சர்வதேச வழக்கறிஞரால் போர்க்குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொசோவா விடுதலை இராணுவத்தில் இருந்த கொசோவா அதிபர் உட்பட 9 போராளிகள் மீது இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவர் 100 கொலைகளைச் செய்த குற்றவாளிகள் என அரச சட்டவாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அரசியல் எதிரிகள் உட்பட சேர்பியா, கொசோவா, அல்பேனியா, ரோமா மக்களையும் கொலை செய்தவர்கள். அத்துடன் காணாமல் போகடித்தல், கடத்துதல், சித்திவதை செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்படுள்ளது.

கொசோவா அதிபர் தாசி எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

கொசோவா நீதிமன்றில் அரச சட்டவாளர் இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்தார். இவர்கள் மீது 10 பிரிவில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

குற்றச்சாட்டு ஒரு குற்றச்சாட்டு மட்டுமே. இது ஒரு நீண்ட விசாரணையின் விளைவாகும், இது ஒரு நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க முடியும் என அரசாங்கத்தின் சிறப்பு அரச சட்டவாளர்கூறியுள்ளார்.

தாசி தலைமையிலான கொசோவோ விடுதலை இராணுவத்திற்கு (கே.எல்.ஏ) எதிரான குற்றச்சாட்டுகள் முன்னாள் ஹேக் போர்க்குற்ற சட்டவாளர் கார்லா டெல் பொன்டே 2008 இல் முதன்முதலில் அமைக்கப்பட்டது. 

கொசோவோவின் அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் ஒரு அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக "ஆதாரமற்றது மற்றும் அவதூறானது" என்று கூறி இந்த குற்றச்சாட்டுகளை கோபமாக மறுத்துள்ளது.

1998-1999ல் நடந்த சுதந்திரப் போர் 10,000 க்கும் மேற்பட்ட உயிர்களைக் பலியெடுத்தது. கொசோவோ அதன் சுதந்திரத்தை 2008 இல் அறிவித்தது, செர்பியா இன்னும் அங்கீகரிக்கவில்லை.

No comments