இலங்கையில் இனி இரவு ஊரடங்கு


இலங்கையில் நாளை (06) முதல் ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை அமுலாக்கப்படவுள்ளது.

மறு அறிவித்தல்வரை இது நடைமுறையில் இருக்கும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடைமுறைகளில் மாற்றமில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments