தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டு!



நாடாளுமன்றத்தேர்தல் அறிவிப்பின் பின்னராக தமிழரசுக் கட்சிக்குள் குத்துவெட்டுக்கு உச்சமடைந்துள்ளது.




சுமந்திரன் அணி, மாவை அணி, சிறிதரன் அணி ,வாலிபர் முன்னணி, மகளிர் அணி என்று உட்கட்சிக் குடுமிச் சண்டையால் ரண களமாகிக் கொண்டிருக்கிறது கட்சி. இந்தச்சண்டையில் இப்போது சுமந்திரன் அணியின் முழுக் கவனமும் திரும்பியிருப்பது சசிகலா ரவிராஜ் மீது என்பதுதான் வேடிக்கை.

சசிகலா ரவிராஜ் மறைந்த மாமனிதர் நடராஜா ரவிராஜ்ஜின் மனைவி. 

சுமந்திரனின் வலது கையான முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் சாவகச்சேரியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் சத்தஞ் சந்தடியின்றி சசிகலாவை களமிறக்கியது ஒரு தரப்பு
ஆனால் எதிர்பார்ப்பிற்கு மாறாக சசிகலா வருகை இப்போது கூட்டமைப்பின் முன்னாள் எம்பிக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இம்முறை மூன்று ஆசனங்களே கிடைக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் சுமந்திரனின் வெற்றிக்கு கடந்த முறை மதனியை பயன்படுத்தியது போல இம்முறை சசிகலாவை பயன்படுத்த திட்டமிட்டது சயந்தன் தரப்பு.

ஆனாலும் சுதாகரித்துக்கொண்ட சசிகலா சுமந்திரனின் நிலைப்பாடு தனது கணவரது நிலைப்பாட்டிற்கு எதிரானதென தெரிவித்து பலியாடு ஆவதிலிருந்து தப்பித்துள்ளார்.

இதனிடையே யாழ்.ஊடக அமையத்தில் மனம் விட்டு ஊடகவியலாளர்களுடன் முதல் சந்திப்பை நடத்திய போது ஓ சுமந்திரன் சேரா அவரும் என்னுடன் ஒரே பாடசாலையில் படிப்பித்தவராயிற்றே என்றார் நையாண்டியாக என்கின்றன ஊடக வட்டாரங்கள்.

அதே போன்று ரவிராஜிற்கு சாவகச்சேரியில் நிறுவப்பட்ட சிலையில் மாமனிதர் நீக்கப்பட்டமைக்கும் கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கூட்டமைப்பிற்கு விழும் புள்ளடியில் தனக்கொன்றென்ற அவரது பிரச்சாரம் பெண்களிடையே ஈர்ப்பினை தோற்றுவித்துள்ளது.

இதனையடுத்து விழிப்படைந்துள்ள முன்னாள்கள் தற்போது கவிழ்க்க மும்முரமாகியுள்ளன. 

No comments