கொரோனா இலங்கை கடற்படையினை விடுவதாக இல்லை!


இலங்கை கடற்படையினை கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்துவருகின்ற நிலையில் தொடர்ந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (09) புதிதாக இனங்காணப்பட்ட 12 பேரில் 10 பேர், கடற்படையைச் சேர்ந்தவர்களென, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

ஏனைய இருவரும் கடற்படையினருடன் நெருங்கிப் பழகியவர்களெனவும் அவர் தெரிவித்துள்ளார். 

வைரஸ் தொற்றாளர்களாக நேற்று பதிவான 12 பேருடன், நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே நாளை திங்கள் முதல் இலங்கை முழுவதையும் திறந்து விட அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களில் பெரும்பாலானவர்கள் இலங்கை கடற்படையாக உள்ள நிலையில் நாளைய தினம் முற்றாக திறந்து விடும் முடிவை மீள் பரிசீலனை செய்ய கோரிக்கையினை அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் கோரியிருந்தமை தெரிந்ததே. 

No comments