கொரோனாவை பரப்பு அரசு காரணமாகும்; கஜா எச்சரிப்பு

அரசாங்கத்தின் கண்மூடித்தனமான செயற்பாடுகளே கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதற்கு காரணமாக அமையும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “கொரோனா வைரஸை பரப்புகின்றதில் இராணுவம் மிக முக்கியமான காரணியாக இருக்கின்றதான ஒருநிலை இன்றைக்கு உதயமாகியிருக்கிறது.

இங்குள்ள முப்படைகளுக்கும் கொரோனோ வைரஸ் தாக்கியிருக்கிறது. குறிப்பாக கொரோனா தொற்றில் முப்படைகளிலும் தான் கூடுதலான எண்ணிக்கை காணப்படுகிறது. அந்தத் தொற்று மிக வேகமாக வளர்ந்து கொண்டுவருகிறதென்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம்.

அப்படிப்பட்ட நிலையில் அந்த முப்படைகளையும் தனிமைப்படுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. அவ்வாறான நிலைமையில் தான் அந்தச் செயற்பாடுகள் அனைத்திற்கும் வடக்கு கிழக்கில் முகாம்களை அமைக்கிறது.

அதுவும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இடங்களில் பொதுக் கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது.

அதனால் அந்த இடங்களை சூழ வாழும் தமிழ் மக்களுக்கு நோய் பரவக் கூடிய ஆபத்தான நிலைக்கு மக்களைத் தள்ளி விடுகின்ற செயற்பாடாகத் தான் அரசின் இந்த முயற்சிகளை பார்க்கின்றோம்.

ஆயினும் இந்த முயற்சிகளுக்கு எதிராக மக்கள் தாங்களாவே வந்து பேராடுகின்ற நிலைமையை நாங்கள் காணக் கூடியதாக இருக்கிறது. பல இடங்களிலும் இது தான் தற்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது." என்றார்.

No comments