வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு

தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவத்தில் மருதங்குளத்தை சேர்ந்த இராஜகோன் சிவகுமார் (40-வயது) என்பவரே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அத்துடன் மேலும் இருவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இதன்போது தர்மகுலசிங்கம் கிருபாகரன் (40-வயது), தர்மகுலசிங்கம் விஜயகுமார் (30-வயது), தர்மகுலசிங்கம் சிந்துஜன் (27-வயது), சிவகுமார் சுஜிதா (27-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்தமையே ஒருவரது உயிரிழப்புக்கு காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments