வாள்வெட்டு பயங்கரம்; ஒரு உயிர் பறிப்பு
தென்மராட்சி – மிருசுவில், கரம்பகத்தில் உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் மருதங்குளத்தை சேர்ந்த இராஜகோன் சிவகுமார் (40-வயது) என்பவரே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அத்துடன் மேலும் இருவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதன்போது தர்மகுலசிங்கம் கிருபாகரன் (40-வயது), தர்மகுலசிங்கம் விஜயகுமார் (30-வயது), தர்மகுலசிங்கம் சிந்துஜன் (27-வயது), சிவகுமார் சுஜிதா (27-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்தமையே ஒருவரது உயிரிழப்புக்கு காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று (03) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் மருதங்குளத்தை சேர்ந்த இராஜகோன் சிவகுமார் (40-வயது) என்பவரே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த இருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
அத்துடன் மேலும் இருவர் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதன்போது தர்மகுலசிங்கம் கிருபாகரன் (40-வயது), தர்மகுலசிங்கம் விஜயகுமார் (30-வயது), தர்மகுலசிங்கம் சிந்துஜன் (27-வயது), சிவகுமார் சுஜிதா (27-வயது) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிந்தமையே ஒருவரது உயிரிழப்புக்கு காரணமானது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
Post a Comment