நெருக்கடிக்குள் இலங்கை: செப்டெம்பரிலேயே தேர்தல்?



தேர்தல்கள் ஆணையாளரின் கருத்துக்களை பார்க்கும் போது நாடாளுமன்ற தேர்தலை நடத்த இன்னமும் மூன்று மாதகாலமாவது செல்லுமென எண்ண வேண்டியுள்ளது எனறு நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும்,‘நீதிமன்ற தீர்ப்பு வந்து 9 தொடக்கம் 11 வாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படுமென்று தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

அப்படியாயின் இன்னும் மூன்று மாத காலங்களுக்கு தேர்தல் இழுபடப் போகிறது. ஏற்கனவே 3 மாதம் இழுபட்டதால் மொத்தமாக 6 மாதம் நாட்டின் பணிகள் தடைப்பட்டு கிடக்கும் நிலைமை உருவாகியுள்ளது’. – என்றார்.

இதேவேளை ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கும் விடயத்தில் அரசியல் தலையீடுகள் இல்லையென்றும் சில அதிகாரிகளே ஒத்துழைப்பை வழங்க மறுக்கிறார்களென்றும் ஜனாதிபதி அங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments