நாடு திரும்ப முண்டியடிக்கும் இலங்கையர்?


அரேபிய நாடுகளிற்கு தொழில் நிமிர்த்தம் சென்றிருந்த இலங்கையர்கள் பலரும் நாடு திரும்ப முற்பட்டுள்ள போதும் அரசு இ;வ்விடயத்தில் அக்கறையற்றிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இலங்கை திரும்ப உதவ கோரி அரேபிய நாட்டு தூதரகங்கள் இலங்கையர்களால் பரவலாக முற்றுகைக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1469 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாக 152 பேர் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 92 பேர் குவைட்டிலிருந்து  வருகைதந்து தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தவர்கள் என்பதுடன், 53 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், மேலும் 5 பேர் சென்னையிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது

No comments