விக்கினேஸ்வரன் ஏமாற தயாராக இல்லை?


ஏம்.ஏ.சுமந்திரன் கூறுவதுபோல இரா.சம்பந்தர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்புச் செயலாளர் க.அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலே  தங்களைப்போல தமிழ் மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் என நம்பிய இரா.சம்பந்தன் சி.வி.விக்னேஸவரனிடம் ஏமாந்தது உண்மையே என அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழ்மக்கள் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை.

சம்பந்தன் எதிர்பார்த்தது போல தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை.ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை. இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை.

சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை. கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப்  போகவில்லை.இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை என்பதனால் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது  உண்மையே.

நல்லாடசியிடம் இரா.சம்பந்தன் ஏமாறவில்லை  என எம்.ஏ.சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் என தலைவர் உட்பட அவரது கட்சியினர் சொல்வது பொய்யா?.

அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் எம்.ஏ.சுமந்திரனும் இரா.சம்பந்தனும் எமது மக்களை மட்டுமல்ல அவரது கடசியினரையும் ஏமாற்றியது உண்மையாகும் என க. அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வேலை வாய்ப்பு எனும் மாய வலையினை பயன்படுத்தி தேசியக்கட்சிகள் வாக்கு அறுவடையில் ஈடுபடுவது தொடர்பில் சி.வி.விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில் இரா.சம்பந்தனை போன்று தானும் சிங்கள ஆட்சியாளர்களிடம் ஏமாற தயாரில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments