இசைப்பிரியாவிற்கு இன்று 38!


இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் 38வது பிறந்த தினம் இன்றாகும்.இந்நிலையில் இசைப்பிரியா நினைவாக அவளை அறிந்த உறவுகளுக்கு 100 பயன்தரு பழமரக்கன்றுகளை வழங்கியுள்ளார்  அவரது நண்பியொருவர். 

நினைவுகளாக அவையும் பயன்தரட்டும்  என தெரிவித்துள்ள அவர் இசைப்பிரியாவின் பிறந்தநாள் இன்று - ஒரு சிறுகதையாய் மலர்ந்தவள் தொடர்கதையாய் போனாள் என நினைவுமீட்டியுள்ளார்.

1982ம் ஆண்டின் இதே நாளன்று பிறந்த இசைப்பிரியா 2009 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது இலங்கை இனஅழிப்பு படைகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments