தந்தை செல்வா நினைவேந்தல் மட்டுவிலில்

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 43வது நினைவுதினமானது இன்று (29) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தலைமையில் மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், வாலிபர் முன்னணி மாநிலத் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு வாலிபர் முன்னணியின் தலைவர், செயலாளர் உட்பட உறுப்பினர்கள் எனக் குறிப்பிடத்தக்க மட்டுப்படுத்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

நாட்டின் நிலைமை காரணமாக கடந்த 26ம் திகதி அனுஷ்டிக்கப்பட வேண்டிய தந்தை செல்வா நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments