கோப்பாயில் குவிந்த பொலிஸ்; ஏன் தெரியுமா?

யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இரண்டு விடுதிகள் கோப்பாய் பிரதேசத்தில் கடமையாற்றி தற்போது விடுமுறையில் உள்ள இராணுவ வீரர்களை இருபத்தொரு நாட்கள் தங்கவைத்து கண்காணிக்க இராணுவத்தினரால் நேற்று (26) கையகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் (27) குறித்த பகுதியில் பொது மக்களின் எதிர்ப்பு ஏற்படலாம் என்று பொலிஸார் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் குறித்த இடத்தில் எந்த ஒரு போராட்டமும் பொதுமக்களால் முன்னெடுக்கப்படவில்லை.

No comments