இருக்கு ஆனா இல்லை என்கிறார் கமால்

இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை. ஆனால் இராணுவத்தினர் தங்குவதற்கு மேலதிக முகாமாக சில பாடசாலைகள் பயன்படுத்தப்படும்.

இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தாயகத்தில் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாடசாலைகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுள்ளனர்.

இராணுவத்துக்கான தனிமைப்படுத்தல் மையம் அமைக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டி வட, கிழக்கில் மக்கள் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments