முல்லையில் மாணவி தற்கொலை; முடிவுக்கு காரணம்?

முல்லைத்தீவு - சிலாவத்தையில் க.பொ.த (சா/த) பரீட்சையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்ற மாணவி ஒருவர், எதிர்பார்த்த 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என்ற விரக்தியில் இன்று (28) காலை 7.30 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் கற்று வந்த சந்திரன் கம்ஷிகா (17-வயது) எனும் பாடசாலை மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று (27) வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் அனைத்து பாடத்திலும் சித்தி பெற்று தனது பாடசாலை ரீதியில் 3ம் இடத்தை பிடித்திருந்த நிலையிலேயே தான் எதிர்பார்த்தது போல் 9-ஏ சித்தி கிடைக்கவில்லை என தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வாழ்த்து சொல்வதற்கு அவரது பாடசாலை ஆசிரியர்கள் அழைப்பெடுத்த போதிலும் அவர்களுடன் பேச மறுத்திருந்த நிலையில் இன்று காலை சுவாமியறையில் குறித்த மாணவி தற்கொலை செய்துள்ளாள்.

No comments