சற்றுமுன் 15 பேருக்கு கொரோனா!

இலங்கையில் இன்று (19) இதுவரை 15 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

தனிமை மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கொழும்பை சேர்ந்த இந்த 15 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று மதியம் ஐவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 171 ஆக காணப்படுகிறது.

No comments