இலங்கையின் கொரோனா 309 உயரவு!

இலங்கையில் இன்று (21) 5 பேருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 309 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேருக்கே நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இன்றும் அதே பகுதியை சேர்ந்த ஐவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 202 ஆக காணப்படுகிறது.

No comments