யாழில் 15 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி

யாழ்ப்பாணத்தில் இன்று (05) 15 பேரின் மாதிரிகள் ஆய்வுகூட பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எவருக்கும் காெரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட மூவரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக் கூடத்தில் பரிசோதைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி குறித்த மூவருக்கும் காெரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது என்று யாழ் போதனா பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் பாஸ்டருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அரியாலை, குருநகர் மற்றும் கொழும்புத்துறை பகுதிகளில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 12 பேரின் மாதிரிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

குறித்த 12 பேருக்கும் காெரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார  சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் மற்றும் யாழ் போதனா பணிப்பாளர் ஆகியோர் தெரிவித்தனர்.

No comments