கொரோனாவுக்கு பலியானவர் உடல் தகனம்

 கொரோனா வைரஸினால் பலியான மூன்றாவது நபரான ஜூனூஸ் (72-வயது) உடல் இன்று (02) சற்றுமுன் கொட்டிகாவத்த மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உறவினர்கள் சிலரை பார்வையிட அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் கடும் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது.

குறித்த நபரின் உடலை தமது சமய முறைப்படி புதைக்குமாறு முஸ்லிம் தலைவர்கள் இன்று (02) காலை பிரதமருடன் பேசிய போதிலும் சுகாதார காரணங்களினால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments