ரணிலும் கைது?சஜித்-ரவி சந்திப்பு!


பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எந்நேரமும் கைதாகலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அடுத்து ரணில் மீது கைவைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று ரவி கருணாநாயக்கவை சென்று சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. பொதுத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யானைச் சின்னம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் இருவரும் புரிந்துணர்வுக்கு வந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன  அதிவிசேட வெற்றிப்பெறுவது உறுதி என, அக்கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் 113 - 120 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட எண்ணிக்கையிலான ஆசனங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

No comments