திருமலையில் 13 அரசியல் குழுக்களின் வேட்மனுக்கள் நிராகரிப்பு

2020ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்கின்ற காலப்பகுதி இன்றுடன் நிறைவடைந்தது.

அந்த அடிப்படையில் இம்முறை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களாக 16 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்தும் 24 சுயேட்சை குழுக்களிடமிருந்தும் மொத்தமாக 40 வேட்புமனுப் பத்திரங்கள் கிடைக்கப்பெற்றன.

அதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3 வேட்புமனுக்கள் மற்றும் 10 சுயேட்சைக் குழுக்களது வேட்புமனுக்கள் அடங்கலாக 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சிங்கள தீப ஜாதிக பெரமுன, தேசிய காங்கிரஸ் கட்சி மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளது வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன.

No comments