தபால் வாக்களிப்பிற்கு விண்ணப்பங்கள் கோரல்?


தேர்தல் அறிவிப்பு இன்னமும் வெளியாகாத நிலையில் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தபால் மூல விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாகஆணைக்குழு கூறியுள்ளது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பங்களை  சமர்ப்பிக்குமாறு அரச ஊழியர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது.
இதற்காக எதிர்வரும் 12ஆம் திகதி முதல் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனு கோரப்படவுள்ளது.

No comments