தாங்களும் தயார் என்கிறார் கேதீஸ்வரன்?


கொரோனோ தொற்று தொடர்பில் வடக்கில் இதுவரையில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. அவ்வாறு தொற்று பரவினால் சிகிச்சை ஏற்பாடுகளும் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே பொது மக்கள் இந்த நோய் தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் வடமாகாண நிலைமை பற்றிய தெளிவூட்டும் ஊடக சந்திப்பொன்று மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவரும் சூழலில் இலங்கையில் உள்நாட்டில் தொற்றுக்குள்ளான 5 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்நோய் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சு எடுத்துவருகின்றது.

அதன் அடிப்படையில் இந்நோய் மிகத்தீவிரமாக பரவிவரும் இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் சீனாவின் வுகான்  பிரதேசத்திலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் இலங்கைக்கு வரும் நாளிலிருந்து 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

ஏனைய நாடுகளிலிருந்தும் சீனாவின் வுகான்   பிராந்தியத்திற்கு வெளியே இருந்தும் வருபவர்கள் வதிவிடங்களில் அல்லது தங்குமிடங்களில் 14 நாட்களிற்கு தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

இந்நிலையில் வடமாகாணத்து மக்கள் மத்தியில் இந்நோய் பற்றிய பதற்றமான சூழல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனினும் வடமாகாணத்தில் இதுவரை ஒருவரும் இந்நோயுடன் இனங்காணப்படவில்லை. எனவே பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை.

உலகின் பலநாடுகளில் இந்நோய் தீவிரமாகப்பரவி வருவதால் வெளிநாட்டுப் பயணங்களை முற்றாகத் தவிர்க்கவும்.

இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் சீனாவின் வுகான் (றுராயn)  பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வருகை தந்திருந்தால் அவர்களது வதிவிடங்களில் 14 நாட்களுக்கு தனிமையில் கண்காணிக்க வேண்டப்படுகின்றார்கள எனவும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments