யாழில் 1000 தாண்டிய தனிமைப்படுத்தல்?

"கொரோனா (கொவிட்-19) வைரஸ் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 1729 நபா்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனா். இவர்களில் 192 பேர் அரியாலை தேவாலய ஆராதனையில் கலந்து கொண்டவர்களாவர். அத்துடன் 80 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகிறது. 

மேலும் முதலாவது கொரோனா தொற்றாளி வசித்த தாவடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்களை உள்ளடக்கிய கிரமாத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. உள்ளே வெளியே எவரும் நுழையாமல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் கோாிக்கை விடுக்கிறோம்."

இவ்வாறு யாழ் மாவட்ட செயலாளர் க.மகேஷன் தெரிவித்தார். யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (23) மாலை கருத்து தொிவிக்கும் போதே அவா் மேற்கண்டவாறு கூறினார். மேலும்,

யாழ் மாவட்டத்தில் மக்கள் தமக்கு தேவையான உதவிகளை தமது பிரதேச செயலாளர் ஊடாக தொடா்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். வெதுப்பக பொருட்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது. மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு பொருட்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் பிரதேச செயலாளர்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவா்களுக்கு உலா் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் அனா்த்த முகாமைத்துவ பிாிவு ஊடாக 1 மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. பிரதமா் ஊடாக மாவட்டத்திற்கு 1 மில்லியன் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது. எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்றார்.

No comments