சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?


வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இதன் பிரகாரம் சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களை பகிரங்கப்படுத்தியும் வருகின்றார்.
யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரதிநிதிகள் சிலருக்கும் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (மார்ச் 01) முற்பகல் இடம்பெற்றது.


கலாநிதி சுரேன் ராகவன் வடமாகண ஆளுநராக பணியாற்றிய காலப்பகுதியில் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பலவற்றை நிற்வேற்றி தந்தமைக்கு நன்றி தெரிவித்த மாணவர்கள், தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவைக்குழு உறுப்பினராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மாணவர் ஒன்றியத்தின் புதிய பிரதிநிதிகளுடன் இணைந்து தீர்ப்பதற்கு உதவி புரியுமாறும் கேட்டுக் கொண்டனர்.


No comments