முள்ளிவாய்க்கால் பிதிர்கடன்?


முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும் தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையுடன் பிதிர்க்கடன் தீர்க்கும் நிகழ்வை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலின் பதினோராவது ஆண்டு நினைவுக் காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வரும் மே மாதம் முள்ளிவாய்க்காலில் நினைகூரல் இடம்பெறவுள்ளது.
இன்றைய சாந்திப் பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர்க் கடன்களைத் தீர்த்தனர்.

No comments