தமிழ் பொலிஸாரிடம் விசாரணை ?

வல்வெட்டித்துறை ஆதி கோயிலுக்கு அண்மையாகவுள்ள பூங்காவில் நிலத்தைத் தோண்டி தேடுதலை மேற்கொண்டிருந்த 3 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்ற பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்டத்துக்குப் புறம்பாக தேடுதலை மேற்கொண்டனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளார்.

குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வல்வெட்டித்துறை ஆதி கோயிலுக்கு அண்மையாகவுள்ள பூங்கா வளாகத்துக்குள் பெருமளவு கஞ்சா போதைப்பொருள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான சிறப்புப் பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் உட்பட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் தகவல் கிடைத்துள்ளது.

தகவலையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பொறுப்பதிகாரிக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தி உரிய அனுமதி பெறமால், சந்தேகத்துக்கிடமான நிலப்பகுதியை இரும்புக் கம்பிகளால் குத்தி தேடுதலை மேற்கொண்டிருந்தனர்.

இதனையறிந்த வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சம்பவ இடத்துக்குச் சென்று 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் எச்சரித்து விடுவித்தார்.

No comments