ஷஹ்ரானின் சகோதரிக்கு மறியல்

உயிர்த்த (ஈஸ்டர்) ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான பயங்கரவாதி ஷஹ்ரான் ஹசிமின் சகோதரி மற்றும் அவரது கணவன் ஆகிய இருவரையும் எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலை அடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் ஷஹ்ரானின் சகோதரியான மொஹமட் காசிம் மொஹமட் மதனியா மற்றும் அவரது கணவரான மொஹமட் நியாஸ் ஆகியோர் கடந்த வருடம் மே முதலாம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவாகிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 12ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

No comments