தபால் மூல பணிகள் ஆரம்பம்?


நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் மீண்டும் தேர்தல் திணைக்களம் மும்முரமாகியுள்ளது.
அவ்வகையில் தேர்தலின் போது தபால் மூல வாக்களிப்பிற்கான பணிகள் தொடங்கியுள்ளது
இதனிடையே தங்களின் பகுதிகளில் காணப்படும் வாக்களிப்பு நிலையங்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு பிரதி மற்றும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் தேசிய தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு  கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார்

No comments