தேர்தல் முடிவை கோத்தாவே எடுப்பார்?



ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண் தெரிவித்த அவர் தேர்தலை நடத்துவதற்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியிடமே இருக்கின்றது என்றும் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் மே மாதம் 4 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பொதுத் தேர்தலை நடாத்த முடியும். ஆனால் தேர்தலுக்கான திகதியினை ஜனாதிபதியே நிர்ணயிக்க வேண்டும் என்பது அரசியலமைப்பின் ஊடக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தேர்தல்களுக்கான திகதியை நியமிப்பதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுகின்றது. இருப்பினும் பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தங்கியுள்ளது.

சித்திரைப் புதுவருடப்பிறப்பு மற்றும் வெசாக் பூரணை தினம் ஆகியன வருவதால் பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தவேண்டி ஏற்படும். இந்தக் காலப்பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுமுறை அதிகமாக காணப்படுவதால் இந்த நிலை ஏற்படும் என கூறினார்.

No comments