சடலம் அடையாளம் காணப்பட்டது

மட்டக்களப்பு - கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடு கடற்கரையில் இனந்தெரியாத வயோதிப பெண்ணொருவரின் சடலம் நேற்று (14) கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் விநாயகபுரம் 6ம் குறுக்கை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தாயன கந்தன் தெய்வானை (லட்சுமி) (வயது – 68) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

இம் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற சந்தேகத்தில் கல்குடா பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலம் விசாரனைகளின் பின்னர் இன்று சனிக்கிழமை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. (150)

No comments