கோத்தா ஆட்சியில் யாழ் பல்கலையில் பறந்த கறுப்பு கொடி

 இலங்கையின் 72வது சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று (04) காலை கறுப்பு கொடிகளுடன் பதாகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு மாற்றப்பட்டு அதன் ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் வேண்டும்.

கொடிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது!

இவ்வாறு குறிப்பிடப்பட்ட பதாகையே அங்கு கட்டப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து வட, கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படும் பாேராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறும் நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments