கொழும்பில் இலக்கு வைக்கப்படும் ஊடக தரப்புக்கள்?


கொழும்பில் மேற்கத்தைய தூதரகங்களுடன் தொடர்புகளை பேணிவரும் ஊடகத்தரப்புக்களை அரச புலனாய்வு துறை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் ஒருவரை இலங்கை குற்றப்புலானய்வு திணைக்களத்தினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பத்திரிகையாளர் அனுரங்கி சிங் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என சிஐடியினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சண்டே ஒப்சேவரின் முன்னாள் ஆசிரியர் தரிசா பஸ்ரியன் தொடர்பிலும் சுவிஸ் தூதரக விவகாரத்தில் அவருக்;கு இருக்ககூடிய தொடர்புகள் குறித்தும் பத்திரிகையாளரிடம் விசாரணைகள் இடம்பெற்றதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

அனுரங்கி சிங் பல மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே கொழும்பை மையமாக கொண்ட தூதரக மட்ட உறவுகளை பேணும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலேயே அரசின் பார்வை திரும்பியுள்ளது.

No comments