ஏட்டிக்கு போட்டி:இலங்கை மீனவர்கள் கைது!


எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் ஐவர் இந்தியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை மன்னார் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள், தனுஸ்கோடி அருகே இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகொப்டரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியக் கடற்படையினர், குறித்த மீனவர்களைப் படகுடன் கைது செய்து இராமேஸ்வரம் மெரைன் பொலிலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதனிடையே அத்துமீறி இடம்பெறும் இந்திய இழுவைப் படகு மீன்பிடித் தொழிலை தடை செய்ய வலியுறுத்தி தீவக மீனவர்கள் இன்று (27) யாழ் நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்திருந்தனர்.
இந்திய இழுவைப் படகின் அத்துமீறலால் தொழில்கள் பாதிக்கப்படுவதுடன் தமது பிள்ளைகளின் எதிர்காலமும் பாதிக்கப்படுவதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்திருந்தனர்.
எனவே, இந்திய இழுவைப் படகின் அத்துமீறிய தொழில் முறையைத் தடை செய்யுமாறும், வளங்களைச் சூறையாடுவதைத் தடை செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments