கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழர் மரபுவழி உழவர் திருவிழாவும் பட்டிப் பொங்கல் நிகழ்வும் சாவகச்சேரியில் கோலாகலமாக இடம்பெற்றது.
சங்கத்தானை முருகன் ஆலய முன்றலில் இருந்து விருந்தினர் சகிதம் மாட்டுவண்டி மற்றும் இசை வாத்தியங்களுடன் இன்று (18) நடைபவனி ஆரம்பமாகி சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு உழவர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கோ பூசை, மங்களை இசை, பொங்கல், கௌரவிப்பு நிகழ்வு, நடன நிகழ்ச்சிகள், கவியரங்கம் மற்றும் இன்னிசைக் கச்சேரி ஆகியன இடம்பெற்றன.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கலந்துகொண்டார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.










No comments