மீண்டும் பொலிஸ் ஊடக பிரிவு

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காமல் இருந்த பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று புத்தாண்டுடன் தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.

அரசின் உயர் மட்டத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன விடுத்த விசேட பேரில்  பொலிஸ் ஊடகப் பிரிவு தனது பணிகளை மீள ஆரம்பித்துள்ளது.

இந் நிலையில்  கடந்த டிசம்பர் 27 ஆம் திகதி வழங்கப்பட்ட இடமாற்றங்களில் பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் கீழேயே இன்று முதல் அந்த பிரிவு இயங்க ஆரம்பித்துள்ளது.

No comments