உண்மையை வெளிப்படுத்தகோரி வவுனியாவில் போராட்டம்?


வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரியும் ஊடகவியலாளர்களின்‌ பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1073 நாட்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும், ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம், இராணுவ ஆட்சி  சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும் ஆகிய வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு  காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே, பிள்ளைகள் எங்கே, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளதாவது, “மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமையை கண்டிக்கின்றோம்.
அத்துடன் பத்திரிகையாளர்களின் ஒருபங்கு ஜனநாயகத்தை வளப்படுத்துவது. மேலும்  ஊடகவியலாளர்கள் நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகள் அவை தங்கள் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை பற்றி பொதுமக்களுக்கு கற்பிக்கின்றது .
பத்திரிகையின் செயற்பாடுகள் தகவல், கல்வி மற்றும் வழிகாட்டல்,பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பாகும். ஒடுக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம் இராணுவ ஆட்சி அல்லது சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும்” என தெரிவித்தனர்.

No comments