மீண்டும் கடத்தல்? மூவர் கைது

வலான பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் என தெரிவித்து ஹபரணை - மீகஸ்வெவ பகுதியில் இயங்கும் மசாஜ் நிலையம் ஒன்றில் பெண்கள் இருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களினால் பயன்படுத்தப்பட்ட பொலிஸ் இலட்சினை, நீலநிற தொப்பி, பொலிஸார் என குறிப்பிடப்பட்ட அடையாள அட்டை மற்றும் ஜீப் வண்டியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30, 39 மற்றும் 55 வயதுடைய குருணாகல், திருகோணமலை மற்றும் புத்தளத்தைச் சேர்ந்தவர்களாவர்.

No comments