தளபதி சுலைமானி: சிரியாவிலிருந்து உளவு?

ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானி குறித்த தகவல்கள் சிரியாவிலுள்ள அமெரிக்க ஒற்றர் ஒருவரினால் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 3 ஆம் திகதி ஈரான் தளபதி கொலை செய்யப்பட்டார். அவர் சிரியாவின் டமஸ்கஸ் நகரிலிருந்து ஈராக்கின் பக்தாத் நகருக்கு வந்தபோதே அமெரிக்க இராணுவத்தின் ட்ரோனர் இயந்திரம் மூலம் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
சுலைமானி சிரியாவிலிருந்து விமானத்தில் புறப்பட்டு விட்டதாகவும், பக்தாத் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு சிரியாவிலிருந்த அமெரிக்க ஒற்றர் ஒருவரே துப்பு வழங்கியுள்ளார். இதன்படியே அமெரிக்கா தாக்குதலுக்கு தயாராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக அல் ஜெஸீரா செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது. 

No comments