கைக்குண்டுகள் மீட்பு!

புதுக்குடியிருப்பு பகுதியில் கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 18 கை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

எஸ்.எப்.ஜி. 87 ரக கைக் குண்டுகள் 16 மற்றும் 75 மில்லி மீட்டர் ரக கைக் குண்டுகள் இரண்டும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments